திருச்சியில் தமிழினத்துக்கான மாநாடு வருகின்ற 24-ம் தேதி நடைபெறும் – சீமான் | 3 மே 2015

2015-05-04 17

Seeman 20150403 Press Interview at Trichy Pothukulu for Ina Eluchi Manadu
சீமான் ஊடக நேர்காணல் திருச்சி இன எழுச்சி மாநாடு பொதுக்குழு 3 மே 2015

திருச்சியில் தமிழினத்துக்கான மாநாடு வருகின்ற 24-ம் தேதி நடைபெறும் – சீமான்

திருச்சியில் தேசிய இனமான தமிழினத்துக்கான மாநாடு வருகின்ற 24-ம் தேதி நடைபெறுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் இதுவரை சாதி,மதத்திற்கான மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது ஆனால் இப்பொழூதுதான் மாபெறும் தேசியஇனமான தமிழினத்துக்கானமாநாடு முதன் முதலாக திருச்சியில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகமீனவர்கள் பிரச்சனையில் மத்தியில் ஆண்ட கட்சிகள் இன்று வரை முக்கியத்துவம் வழங்கவில்லை, அந்தவகையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினர்

Videos similaires